உத்தரப்பிரதேசம் - பஞ்சாப் மாநில சிவப்பு மிளகாய் வத்தல் வரத்தில் குறைவு குண்டூர் :- கிடைத்த செய்திகளின்படி உத்தரப்பிரதேச ராம்பூர், பரேலி மற்றும் பஞ்சாப் மாநில முக்கிய உற்பத்தி பகுதியான தரண்-தரண் வட்டாரங்களில் விவசாயிகளிந் சரக்கு வரத்து குறைந்துவிட்டது. மேலும் சில பகுதியில் வரத்து முடிவடைந்துவிட்டது. காரணம் நடப்பு ஆண்டு விலையில் குறைவால் பருவ ஆரம்பத்திற்குப்பிறகு சில விவசாயிகள் பச்சை மிளகாயை அதிக அளவில் விற்பனை செய்துள்ளார்கள். மேலும் சில மட்ட ரக வத்தலை விவசாயிகள் நிலத்திலேயே விளைச்சலை களைந்துவிட்டார்கள். ஆனால் நடப்பு ஆண்டு 2 மாநிலத்திலும் பம்பர் உற்பத்தி மற்றும் நல்ல ரகச்சரக்கு வரத்தால் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், டில்லி, ஹரியாணா போன்ற மாநிலத்திற்கு சப்ளை யாவதால் ஆந்திர மாநில சரக்குக்கான தேவை குறைந்துவிட்டது. நடப்பு ஆண்டு நாட்டில் சாதகமான பருவம் நல்ல மழைக்கா வாய்ப்புள்ளது. அதன் பிறகு தென்னிந்திய அனைத்து மாநிலத்திலும் விவசாயிகள் வத்தலுக்குப் பதிலாக பருத்தி, மக்கா, பருப்பு போன்றவற்றை விதைக்க ஆர்வமாகி வருகிறார்கள். இதனால் நயம் ரகச்சரக்கில் அதிக மந்தம் ஏற்படாது. ஆனால் வரப்போகும் புதிய பருவம் மீதி இருப்பிலிருந்து ஆரம்பமாக வாய்ப்புள்ளது. ஆந்திர குண்டூர் மண்டியில் சென்ற ஒரே வாரத்தில் குண்டூர் உட்பட சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏறக்குறைய 1,05,000 மூட்டைகள் விவசாயிகள் சரக்கு வரத்தில் 85,000 மூட்டைகள் விற்பனையானதில் அனைத்து ரகத்தின் வியாபாரம் தரத்திற்கு ஏற்ப நடைபெறுகிறது. குண்டூர் மண்டி யார்டில் ஒரே வாரத்தில் ஏசி கிட்டங்கியிலிருந்து 2 ஆண்டு பழைய, சென்ற பருவத்தோடு நடப்பு ஆண்டு புதிய விளைச்சலில் இருந்து மார்ச், ஏப்ரல் மாத நயம் ரகம் ஏறக்குறைய 3 லட்சம் மூட்டைகள் வரத்தில் 1,70,000 மூட்டைகள் விற்பனையானதில் 341, தேஜா, 334, சூப்பர்-10 போந்ற டீலக்ஸ் ரகத்தில் 200-300 ரூபாய் வரை உயர்வு ஏற்பட்டது. ஆர்மூர் பகுதி சண்டு ரகத்திற்கான தேவை நன்றாக உள்ளது. இதனால் ரகவாரியாக வியாபாரமாகியது. சென்ற வாரம் குண்டூரில் ஏசி அல்லாத தேஜா 8000 -11,000, இதர ரகத்தில் 7000-9000, தேஜா சண்டு 5500-6500, சாதாரண சண்டு 3000-5000 வரையும், குண்டூர் ஏசி கிட்டங்கியிலிருந்து தேஜா 11,000-13,500, டீலக்ஸ் 13,600-13,800, 355 பேட்கி 10,000-12,500, சின்ஜேட்டா பேட்கி (5531) ரகம் 10,000-12,000, டிடி ரகம் 10,000- 13,000, 2043 பேட்கி 11,000-13,000, 341 ரகம் 11,000 -13,500, டீலக்ஸ் 14,000, நெ-5 ரகம் 11,000-13,500 ரூபாய் வரையும்,
Updated On: June 23, 2025, 6:57 amமல்லி ஜூன் வாய்தா குறைவான விலையில் முடிவுற்றது ஹைதராபாத் :- என்.சி.டி.ஈ.எக்சில் சென்ற வாரம் மல்லி ஜூன் வாய்தா 7000 ரூபாயில் முடிவடைந்தது,. மேலும் 25,ஏப்ரல் முதல் இதுவரை ஜூன் மாத வாய்தாவில் 500 ரூபாய் வரை குறைவு ஏற்பட்டது. மேலும் ஜூலை வாய்தா ஒரே வாரத்தில் 16 குறைந்து 7002, ஆகஸ்ட் வாய்தா 44 குறைந்து 7052 ரூபாயில் முடிவுபெற்றது. தற்போது உற்பத்தி, உபயோக மாநிலம் உட்பட அனைத்து இடங்களிலும் சரக்கு ஏராளமாக இருப்பு உள்ளது. மேலும் விற்பனையாளருக்கு ஏற்ப கொள் முதல்தாரர்கள் முன் வரவில்லை. இதனால் ஆகஸ்ட் வாய்தா விலையில் 100 ரூபாய் வரை குறைவு ஏற்படலாம். மத்தியப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மாநில மண்டியில் மழைகால பருவமாக இருப்பதால் விவசாயிகளின் சரக்கு வரத்து குரைந்துவிட்டது. ஆனால் அரவை நிறுவனத்தினரின் சாதாரண கொள் முதல் காரணமாக சென்ற 2 வாரங்களாக விலையில் 100-150 ரூபாய் வரை குவின்டலுக்கு ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு வருகிறது. வியாபாரிகளின் கணிப்புப்படி சென்ற வாரம் குஜராத்தில் சென்ற ஆண்டின் பழைய சரக்கு 40 கிலோ மூட்டை 3150-3200, ஈகிள் 3275, நயம் ரகச்சரக்கு 3300-3500, தமிழ்நாட்டின் விருதுநகர், மதுரை வட்டார டெலிவரி வியாபாரமாகிறது. ஆனால் கொள்முதல்தாரர்கள் தேவைக்கு ஏற்ப கொள்முதல் செய்கிறார்கள். காரணம் நாட்டில் சரக்கு ஏராளமாக இருப்பு உள்ளது. மேலும் குஜராத்தில் நடப்பு ஆண்டு நிலக்கடலை விதைப்பு விரைவில் நடைபெற்றது. மற்றும் 3 மாதத்திற்குப்பிறகு பயிர் அறுவடையாவதோடு விதைப்பும் ஆரம்பமாகலாம். இந்த நிலையில் புதிய பருவம் ஒவ்வொரு ஆண்டை விட விரைவில் ஆரம்பமாகலாம். ராம்கன்ஜ் மண்டியில் சென்ற வாரம் 10-12 ஆயிரம் மூட்டைகள் வரத்தில் பாதாம் 6600-6700 ரூபாய்,
Updated On: June 23, 2025, 6:56 amவெல்ல இருப்பில் குறைவு - விலை உயர்வு ஹைதராபாத் :- கிடைத்த செய்திகளின்படி நாட்டின் முக்கிய உற்பத்தி மாநிலத்தில் வெல்ல இருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. மேலும் வரப்போகும் பண்டிகைக்காந தேவை ஏற்பட்டு வருவதால் நயம் ரகத்தின் விலையில் ஏறக்குறைய 100 ரூபாய் வரை குவின்டலுக்கு உயர்வு ஏற்பட்டது. வரப்போகும் ஆகஸ்ட் முதல் வாரம் வரை மேலும் 200 ரூபாய் வரை உயர்வு ஏற்படலாம். கர்நாடக மாண்டியா, சாம்ராஜ்நகர், ஷிமோகா வட்டாரங்களில் வாரத்திற்கு 80-85 லாரிகள் வெல்லம் வருகிறது. மேலும் ஆகஸ்ட் மாத கடைசி வாரம் புதிய சரக்கு தயாராவது ஆரம்பமாகிவிடும். இதனால் வரத்து உயரலாம். ஆனால் நாட்டிந் உபயோகத்திற்கு போதுமானதாக இருக்காது. அதே போல தமிழ்நாட்டின் சேலம், கவுந்தப்பாடி வட்டார அனைத்து மண்டியிலும் சேர்ந்து ஏறக்குறைய 40,000 மூட்டைகள் வரத்தில் மொத்த சரக்கும் விற்பனையாகிறது. உத்தரப்பிரதேச முஜப்பர்நகர் ஏசி கிட்டங்கியில் 16,ஜூன் வரை வெல்ல இருப்பு சென்ற ஆண்டு 23,110 கட்டாவாக இருந்தது நடப்பு ஆண்டு 2,13,965 கட்டா குறைந்து 9,09,145 கட்டவாகியது. இதில் சாக்கூ 5,16,638 கட்டாவாக இருந்தது குறைந்து 4,25,330, பாப்டி 1,62,876 ஆக இருந்தது 1,32,637, ரஸ்கட் 39,104 ஆக இருந்தது 35,617, குர்ப்பா 10,000 ஆக இருந்தது 5500 கட்டா மாத்திரம், சதுர வடிவம் 1,39,295 ஆக இருந்தது குறைந்து 1,30,288, ரப்டின் 2,22,603 ஆக இருந்தது 1,79,323 கட்டா இருப்பாக உள்ளது.
Updated On: June 23, 2025, 6:54 amஉளுந்து விதைப்பில் உயர்வு - பிரேசில் நாட்டு புதிய சரக்கு ஆகஸ்ட் மாதத்தில் ஹைதராபாத் : - கிடைத்த செய்திகளின்படி வரப் போகும் கரீப்பருவத்திற்கான மகாராஷ்டிரம், கர்நடாகம், குஜராத் மாநில உளுந்து விதைப்பில் உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் தற்போது இறக்குமதி உளுந் தோடு உள்ளூர் கோடைகால பருவச்சரக்கு தொடர் சப்ளையால் விலையில் உயர்வு ஏற்படவில்லை. மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை ரிப்போர்ட்படி நடப்பு ஆண்டு கரீப்பருவத்தில் 13,ஜூன் வரை நாட்டில் உளுந்து விதைப்பு சென்ற ஆண்டின் இதே சமயம் 18,000 ஆக இருந்தது உயர்ந்து 41,000 எக்டாரில் ஆகியது. மேலும் கர்நாடக வேளாண் துறை மாநிலத்தில் விதைப்பு சென்ற ஆண்டு 38,100 ஆக இருந்ததை விட 37,600 எக்டார், குஜராத் விவசாயத்துறை கணிப்புப்படி 16,ஜூன் வரை விதைப்பு 7 எக்டாரில் நடைபெற்றது. சென்ற ஆண்டின் இதே சமயம் வரை விதைப்பு நடைபெறவில்லை.சர்வதேச மார்க்கெட்டில் மியான்மரின் எஸ்.க்யூ சி அண்டு எஃப்-ல் 845 டாலர், எப்.ஏ.க்யூ 775 டாலர் டன் வரை கூறப்படுகிறது. மற்றும் வியாபாரிகள் கூற்றுப்படி நடப்பு பருவத்திற் காக பிரேசில் நாட்டு உற்பத்தியில் உயர்வு ஏற்பட்டு வருகிறது. மற்றும் ஜூன் முதல் பயிர் அறுவடை வேலை ஆரம்பமாகிவிட்டது.வரப்போகும் ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் பிரேசிலில் இருந்து புதிய சரக்கு வரலாம். தற்சமயம் பிரேசில் நாட்டு பழைய சரக்கின் தரம் குறைவாக இருப்ப தால் 7500-7600 வரை மெதுவாக வியாபாரமாகிறது. சென்னையில் ரெடியில் இறக்குமதி எஸ்.க்யூ 275 டாலர் உயர்ந்து 7650, எப்.ஏ.க்யூ 6750, தற்சமயம் குஜராத்தின் பாட்டன், ஜாம்நகர் வட்டார நாட்டு ரகம் கலப்பு டி-9 ரகம் சென்னை டெலிவரி 7900, வேராவல், போர்பந்தர், சோம்நாத் வட்டார நயம் ரகம் 8100, மத்தியப்பிரதேச ஜபல்பூர் வட்டார க்ராவிட்டி க்ளீன் 7800, ஆந்திர சாதா 7200, பாலிஷ் 7300, தமிழ்நாட்டின் தூத்துக்குடி, தஞ்சாவூர் வட்டார ஆவரேஜ் 6200-6700 வரை விற்பனையாகிறது. கர்நாடக மைசூர் வட்டாரங்களில் புதியது வரத் தொடங்கிவிட்டது. ஆனால் அதிக மழையால் சரக்கின் தரம் மழையடிபட்டதாக வருகிறது. உத்தரப் பிரதேச அலகாபாத், கான்பூர் வட்டாரங்களில் புதிய சிவப்பு உளுந்து விலை குறைந்து 8300 வரை ஆனபிறகு 200 -250 ரூபாய் வரை உயர்வு ஏற்பட்டது. மகாராஷ்டிரம், தெலங்கானாவில் கோடைகால உளுந்து வரத்து ஏறக்குறைய முடிவடைந்துவிட்டது. இதனால் ஆந்திர கடப்பா, கிருஷ்ணா, நந்தியால், பொத்தட்டூர் வட்டாரங்களில் பாலிஷ் உளுந்து 100 ரூபாய் உயர்ந்து 7100-7200, சாதா 6900-7000, மத்தியப் பிரதேச அனைத்து மண்டியிலும் சேர்ந்து தினசரி 40-45 ஆயிரம் மூட்டைகள் வரத்தில் ஜபல்பூரில் 10-11 ஆயிரம் மூட்டைகள் வரத்தில் 6000-7200, இந்தூரில் 6500-7000 ரூபாயாகியது.
Updated On: June 23, 2025, 6:50 amகர்நாடக எள் விதைப்பில் உயர்வு விலையில் மந்தம் ஹைதராபாத் : - வேளாண் மந்திராலய வார ரிப்போர்ட்டின்படி ஆரம்ப கரீப் விதைப்பு கணக்கெடுப்பு மூலம் தெரிய வந்த செய்தியில் நாட்டில் 13,ஜூன் வரை கரீப்பருவத்தில் எள் விதைப்பு சென்ற ஆண்டு13,000 ஆக இருந்தது 15,000 எக்டாரில் நடைபெற்றது.கர்நாடகத்தில் 13, ஜூன் வரை எள் 7300 ஆக இருந்தது 12,300 எக்டாரில் நடைபெற்றது. பீகார் மாநில சமஸ்திப்பூர் பகுதியில் கோடை கால புதிய சரக்கு 50-60 மூட்டைகள் தினசரி வரத்தில் உள்ளூரில் 8500- 9000 வரை வியாபாரமாகியது. இந்த நிலையில் விலையில் உயர்வு ஏற்பட வாய்ப் பில்லை. காரணம் நடப்பு ஆண்டு விலை குறைவால் குஜராத்தின் சிறிய கிராமத்தில் கமிஷன் ஏஜென்ட்கள், வியாபாரி சரக்கை இருப்பு வைக்கிறார்கள். மத்தியப் பிரதேச நீமச், மன்சூர், ஜாவ்ரா, ரத்லாம் வட்டாரங்களில் தினசரி 1000-12 00 மூட்டைகள் புதியது வரத்தில் நயம் 9600-9900, நடுத்தரம் 8700-9500, ஆவரேஜ் 8000-8400, மேற்கு வங்காளத்தில் சென்ற ஒரே வாரத்தில் 12-15 ஆயிரம் மூட்டைகள் வரத்தில் உள்ளூர் மண்டியில் சிவப்பு அன்க்ளீன் 5400-5500 ரூபாய்
Updated On: June 23, 2025, 6:49 amதுவரம்பருப்பில் சாதாரண கிராக்கி ஹைதராபாத் :- வியாபாரிகளின் கணிப்புப்படி சென்ற வாரம் வரை நாட்டில் துவரை விலையில் ஏகக்குறைவு ஏற்பட்டதால் இருப்பு வைத்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சரக்கை விற்பனை செய்ய முன்வர வில்லை. ஒரு முறை மழை பெய்ததாலும், ஜூலை மாத முதல் வாரத்தில் உள்ளூரில் தேவை ஏற்படலாம் என்பதால் நயம் ரகத்தின் துவரைக்கான தேவை ஏற்பட்டதால் உள்ளூர், சர்வதேச மார்க்கெட் விலையில் சிறிதளவு சீராகியது. ஆனால் அதிக விலை உயர்வுக்கு வாய்ப்பில்லை. மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை ரிப்போர்ட்டிந்படி நடப்பு ஆண்டு கரீப்பருவத்திற்காக நாட்டில் துவரை விதைப்பு நடைபெற்றுவந்தது. இதுவரை விதைப்பு சென்ற ஆண்டை விடக்குறைவாகியது. கர்நாடக வேளாண் துறை கணிப்புப்படி மாநிலத்தில் 13,ஜூன் வரை விதைப்பு சென்ற ஆம்டு 1,65,100 ஆக இருந்ததை விட 1,12,000, குஜராத் வேளாண் துறை கணிப்புப் படி 16,ஜூன் வரை விதைப்பு சென்ற ஆண்டின் இதே சமயம் 338 ஆக இருந்தது 168 எக்டாராகியது. வடஇந்தியாவுக்காக மத்தியப்பிரதேச துவரம்பருப்பு நாக்பூர், கட்னி வட்டாரங்களிலிருந்தும், ஒரிசா, மேற்கு வங்காளம், அஸ்ஸாம் பகுதிக்காக பாட்டாபாரா, பிலாஸ்பூர், ராய்ப்பூர் வட்டாரங்களிலிருந்து செல்கிறது. ஆனால் கொள்முதல்தாரர்கள் தேவைக்கு ஏற்ப கொள்முதல் செய்வதால் பருப்பு மில்கள் துவரை கொள்முதலை மெதுவாக செய்து வருகிறது. சர்வதேச மார்க்கெட்டில் மியான்மரில் உயர்ந்து 725 டாலர் டன் வரை கூறப்படுகிறது. இதனால் மும்பையில் இறக்குமதி லெமன் 285-300 உயர்ந்து 6385-6400, மட்வாரா 5750, மொசாம்பிக்கிந் வெள்ளை, கஜ்ரி 5950-6000, சூடானில் 6500, சென்னையில் லெமன் 6375-6400 வரை வியாபாரமாகிறது. வியாபாரிகள் கணிப்புப்படி தற்சமயம் தமிழ்நாட்டில் அதிகப்படியான பருப்பு மில்கள் துவரம்பருப்பு மற்றும் பாசிப்பருப்பை அதிகமாகக்கொள்முதல் செய்து வருகிறது. இதனால் சரக்கின் தரம் குறைவாக இருப்பதால் துவரைக்கான தேவை ஏற்படவில்லை. சென்ற வாரம் மகாராஷ்டிர உத்கீர், ஔராத் ஷாஜானி, லாத்தூர் வட்டார நயம் ரகம் சென்னை டெலிவரி 7400-7450, குஜராத்தின் பி.டி.என்-2 ரகம் 7600-7700, லெமன் துவரை கன்டெயினரில் 6425, கிட்டங்கி சரக்கு 6375, கர்நாடக சிவப்புத்துவரை விருதுநகர், சேலம் டெலிவரி 7300, வெள்ளை 7600, கர்நாடக கட்னி டெலிவரி 7150-7250, ராய்ப்பூர் டெலிவரி 6850-7000 ரூபாய் வரை ஆகியது. மகாராஷ்டிர சோலாப்பூரில் தினசரி 17-18 லாரிகள் சரக்கு வரத்தில் குலாபி ரகம் 5800-6800, ஆவரேஜ் 6400-6600, லாத்தூரில் மாருதி, வெள்ளை, குலாபி ரகம் 6500-6850, குஜராத்தின் ராஜ்கோட்டில் துவரை 6000- 6600, தாஹோதில் நடுத்தரம் 5100-5400, கல்பர்காவில் 6000-6800, பட்கா 9800, சவ்வா நெம்பர் 8400-8800, லாத்தூர், அகோலா, நாக்பூர் வட்டாரங் களில் பட்கா பருப்பு 9600-9800, சவ்வா நெம்பர் 8900-9000 ரூபாய் வரை வியாபாரமாகியது.
Updated On: June 23, 2025, 6:48 amரோமானியாவில் கோதுமை-கடுகு உற்பத்தி ரிக்கார்டு அளவில் ஆக வாய்ப்பு ரோமானியா :- ஐரோப்பிய சங்கத்தின் மிகப்பெரும் உணவு தானிய உற்பத்தியாளர்கள் நாட்டிலிருந்து ஒரு ரோமானியாவில் சென்ற 10 ஆண்டில் மிகவும் அதிகமாக வறட்சி நிலவிதோடு தற்போது வசந்தகால பருவத்தில் நல்ல மழை பெய்ததாலும், சாதகமான பருவ நிலையாலும் உணவு தானியம் பம்பர் அளவில் நடைபெற வாய்ப்புள்ளது.மே மாத இறுதி மற்றும் ஜூன் மாத ஆரம்பத்தில் முக்கிய உற்பத்தி பகுதியில் நல்ல மழை பெய்ததால் நாட்டின் குளிர்கால பருவத்திற்காக வானிலை சாதகமாக மாறியுள்ளது. வசந்த கால பருவத்தில் விதைப்பு பயிர் மகசூல் அதிகமாகலாம் என்று கணிக்கப்படுகிறது. மந்திராலய கணிப்புப்படி 28,மே வரை கோதுமை, கடுகு மற்றும் ஹை-ப்ரீடு பயிர் விதைப்பு 23 லட்சம் எக்டாரில் நடைபெற்றது. அது ஐரோப்பிய கமிஷன் மூலம் கணிக்கப்பட்ட 21,30,000 எக்டாரை விட அதிகமாகும். இதில் கடுகு, ஹை-ப்ரீடு விதைப்பு 80,000 எக்டாரில் ஆகலாம் என்று கணிக்கப்பட்டது. அதற்கு ஏற்ப விதைப்பு அதிகமாகியது. மற்றும் 2024 ல் குளிர்கால கடுகு விதைப்பு முதல் முறையாக 7 லட்சம் எக்டாரை தாண்டியபிறகு நடப்பு பருவத்தில் 7,02,000 எக்டார் வரை ஆகியது. தற்போது பார்லி விதைப்பு முந்தைய பருவத்தை விட குறைந்து 4,47,000 எக்டாரில் ஆகியது. அது ஐரோப்பிய கமிஷன் மூலம் கணிக்கப்பட்டபடி சென்ற ஆண்டுக்குச்சமமாக 5,29,000 எக்டாராக இருந்ததை விடக்குறைவாகும். காரணம் விவசாயிகள் பார்லிக்குப்பதிலாக கோதுமையை விதைத்துள்ளார்கள். இதனால் பார்லி உற்பத்தி 24 லட்சம் டன்கள் வரை இருக்க வாய்ப் புள்ளது. அது ஐரோப்பிய கமிஷன் கணிப்புப்படி சென்ற ஆண்டு ரிக்கார்டு உற்பத்தி 27 லட்சம் ஆக இருந்தது 10.8 சதம் குறைவாக உள்ளது. ரோமானியாவில் முக்கிய பருவத்தில் மக்கா விதைப்பு மிகவும் அதிகமாக நடைபெறும். ஆனால் நடப்பு பருவத்திற்காக ஐரோப்பிய கமிஷன் 22,60,000 எக்டாரில் விதைப்பாகும் என்று கணித்தது. அது 5 ஆண்டு ஆவரேஜ் ஆண்டை விட 5.8 சதம் குறைவாகும். ஐரோப்பிய கமிஷன் கணிப்புப்படி நடப்பு ஆண்டு மக்கா எக்டாருக்கு ஆவரேஜ் மகசூல் 4.48 டன்னாக இருந்ததோடு 1 கோடியே 01 லட்சம் டன்கள் வரை உற்பத்தியாக வாய்ப்புள்ளது. ஒரு ஏஜென்சி கணிப்புப் படி நடப்பு ஆண்டு உற்பத்தி சென்ற ஆண்டை விட உயர்ந்து 1 கோடியே 16 லட்சம் டன்கள் வரை ஆகலாம். நடப்பு ஆண்டு நாட்டில் கோதுமை மகசூல் சென்ற ஆண்டை விட 7.8 சதம் உயர்ந்து எக்டாருக்கு 4.97 டன்னாக வாய்ப்புள்ளது. அது சென்ற 5 பருவத்தில் ஆவரேஜ் ஆக 4.11 டன்னாக இருந்ததை விட 20.9 சதம் அதிகமாகும். இதனால் கோதுமை உற்பத்தி 2024 ல் 92,90,000 ஆக இருந்தது 18.8 சதம் உயர்ந்து 1 கோடியே 10 லட்சம் டன்கள் வரை ஆகலாம்.மேலும் ஏஜென்சி கணிப்புப்படி உற்பத்தி 1 கோடியே 30 லட்சம் முதல் 1 கோடியே 33 லட்சம் டன்னாகலாம். அது நாட்டின் உற்பத்தியில் மிகவும் அதிகமாகும். வேளாண் மந்திராலயத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரி கணிப்புப்படி மண்ணில் ஈரப்பதம் நன்றாகவும். நாட்டில் பயிர் நிலைமை அருமையாக உள்ளதால் 2025 ல் ரோமானியாவில் கடுகு உற்பத்தி ரிக்கார்டு அளவில் நடைபெறவாய்ப்புள்ளது.ஐரோப்பிய கணிப்புப்படி கடுகின் ஆவரேஜ் மகசூல் எக்டாருக்கு 2.81 டன்கள் ஆதாரத்தில் 2024 ம் ஆண்டில் உற்பத்தி 11,60,000 டன்னாக இருந்ததை விட 20 லட்சம் டன்கள் வரை ரிக்கார்டு அளவில் ஆகலாம். அது 2023 ல் 18 லட்சம் டன்னாக இருந்ததை விட அதிகமாகும்.
Updated On: June 23, 2025, 6:46 amமசூர் விலை திடம் ஹைதராபாத் :- வியாபாரிகளின் கணிப்புப்படி உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் போன்ற மசூர் உற்பத்தி மாநிலத்தில் விவசாயிகள் விதைப்பு வேலையில் மும்மரமாக உள்ளார்கள். இதனால் மண்டியில் வரத்து குறைந்துவிட்டது. மற்றும் கடலை, துவரை விலையில் திடம் ஏற்பட்டதால் வெளிநாட்டி லிருந்து இறக்குமதி சரக்கு விலையில் 50-75 ரூபாய் வரை குவின்டலுக்கு உயர்வு ஏற்பட்டது.கிடைத்த செய்தி களின்படி நாட்டில் தற்போது தென் மேற்கு பருவ நிலை சாதகமாக இருப்பதாலும், அதிக மழை பெய்யலாம் என்பதாலும் தீபாவளி வரை வரப் போகும் ரபிப் பருவ,2026 ம் ஆண்டுக்கான மசூர் விதைப்பில் உயர்வு ஏற்படலாம். காரணம் அரசு பருப்பு உற்பத்தியை உயர்த்த வேகமாக முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில் வரப்போகும் ரபிப்பருவத்திற்கான நிர்ணய விலையில் உயர்வு ஏற்படலாம். இருமாநிலங்களிலும் பட்டாணி விதைப்பில் குறைவு, மசூர் விதைப்பில் உயர்வும் ஏற்படலாம். மேலும் அரசு பட்டாணிக்கான நிர்ணய விலையை அறிவிக்காது. மும்பையில் கானடாவின் இறக்குமதி மசூர் கண்டெயினரில் 6150, முந்தரா துறைமுகத்தில் 5950, ஹாஜிராவில் கானடா ரகம் 6025 வரையும் வியாபாரமாகியது. மத்தியப்பிரதேச ஜபல்பூர், அசோக் நகர், கன்ஜ் பசோதா, சாகர் பகுதியில் 5000-6400, இந்தூரில் நாட்டு சரக்கு 6000-6050 வரை வியாபாரமானதால் இருப்பு வைத்தவர்கள் சரக்கை வெளியே கொண்டு வருகிறார்கள். உத்தரப்பிரதேச மண்டியில் 5800-6100, பரேலியில் பருவட்டு 6675-6700, சிறியது 7050-7100, பெய்ராய்ச்சில் 7300 ரூபாயாகியது.
Updated On: June 23, 2025, 6:45 amஇறக்குமதி கடலை விலை திடம் ஹைதராபாத் :- நாட்டில் மழைக்கால பருவம் ஆரம்பமானதோடு கடலை பருப்பில் கிராக்கி ஏற்பட்ட தால் இறக்குமதி மற்றும் உள்ளூர் கடலை விலையில் சீர் ஏற்பட்டது. மேலும் விலையில் 50-100 ரூபாய் வரை உயர்வு ஏற்பட்டால் இருப்பு வைத்தவர்களின் விற்பனை ஆரம்பமாகலாம். ஆனால் விலையில் அதிக மந்தம் ஏற்படாது. காரணம் மகாராஷ்டிர மராட்வாடா, விதர்ப் வட்டாரங்களில் சிறிய இருப்பு வைத்தவர்களின் சரக்கு விற்பனையாகிவிட்டது. வரப்போகும் தீபாவளி வரை தொடர்ந்து கடலைக்கான தேவை ஏற்படலாம். இந்த நிலையில் 150- 200 ரூபாய் வரை ஏற்றத்தாழ்வு ஏற்படலாம்.சென்ற வாரம் மும்பை துறைமுகத்தில் இறக்குமதி தான்சானிய கடலை 150 உயர்ந்து 5600, ஆஸ்திரேலிய சரக்கு 5750, சூடானில் காபூலி 6450, ஆந்திர சரக்கு விருதுநகர், ஈரோடு வட்டார டெலிவரி 6350, கர்நாடக சரக்கு 6400 வரை வியாபாரமாகியது. மகாராஷ்டிர லாத்தூரில் மில் ரகம் 5700-5800, அன்னகிரி 5800-5900, சோலாப்பூர் வட்டார மில் ரகம் 5500-5750, அன்னகிரி 5900=6000, அகோலா, அமராவதி வட்டார சாதா ரகம் 5400-5925, காம்காவ் வட்டாரங்களில் மில் ரகம் 5200-5475, குஜராத் மண்டியில் நாட்டுக்கடலை 5100-5500, முள்ளுக்கடலை 5500-5600, காபூலி 7500-9000 வரையும் வியாபார மாகியது.டில்லியில் சென்ற ஒரே வாரத்தில் ராஜஸ்தான் வட்டாரக்கடலை 5800-5825, மத்தியப்பிரதேச சரக்கு 5750-5775, மத்தியப்பிரதேச அனைத்து மண்டியிலும் சேர்ந்து ஏறக்குறைய 18-20 ஆயிரம் மூட்டைகள் வரத்தில் 5000-5450, காபூலி பி-2 ரகம் 2100 மூட்டைகள் வரத்தில் 5200-6400, இந்தூரில் 5900-5925, டாலர் 8605-8805, காபூலி 42-44 கவுன்ட் 11,400, 44-46 கவுன்ட் 11,100, 46-48 கவுன்ட் 10,800, 50-52 கவுன்ட் 9900, 58-60 கவுன்ட் 8600, மற்றும் 80-85 கவுன்ட் 6900 வரையும் விற்பனையாகியது. ராஸ்தானில் கடலை 5200-5450, உத்தரப் பிரதேசத்தில் 5300-5550, ஆந்திர கர்நூல், கடப்பா, சித்தூர், ஓங்கோல் வட்டாரங்களில் ஜே.ஜே ரகக்கடலை 5900, காக்-2 காபூலி 6100-6200, டாலர் கடலை 8800 ரூபாயாகியது.
Updated On: June 23, 2025, 6:44 amஆந்திர மாநிலத்தில் சிவப்பு மிளகாய் அதிக இருப்பால் விதைப்பில் குறைவு ஏற்பட வாய்ப்பு குண்டூர் :- சென்ற நிதி ஆண்டில் வத்தல் ஏற்றுமதி 2023-24 ல் 6,01,000 ஆக இருந்தது 19 சதம் உயர்ந்து 7,15,000 டன்களாகியது. ஆனால் ரூபாய் நாணய மதிப்பில் ஏற்றுமதி ஓராண்டுக்கு முன்பு 150 கோடி டாலராக இருந்தது குறைந்து 134 கோடி டாலர் வரை ஆனபோதும் மொத்த நாட்டின் மசாலா ஏற்றுமதியில் சிவப்பு வத்தலின் பங்கு 25 சதத்திற்கும் அதிகமாக இருந்தது. மேலும் வியாபாரிகள் கணிப்புப்படி இந்திய வத்தல் விலையிலும் குறைவால் ஏற்றுமதிக்கான தேவை ஏற்படலாம். ஆந்திர குண்டூர் மண்டி கோடைகால விடுமுறை முடிவடைந்ததோடு 9,ஜூன் முதல் வியாபாரம் ஆரம்பமாகியது. ஆனால் ஒரே வாரத்தில் ஏறக்குறைய 1 லட்சம் மூட்டைகள் வரத்தில் 80,000 மூட்டைகள், ஏசி கிட்டங்கியிலிருந்து 1,90,000 மூட்டை களும் வந்தது. இதில் 2 ஆண்டு பழைய, சென்ற ஆண்டு, நடப்பு ஆண்டு மார்ச்,ஏப்ரல் மாதசரக்கு வந்தது. ஆனால் மொத்த விற்பனை 1,10,000 மூட்டைகளாகும். ஆனால் நடுத்தரம், நடுத்தர நயம் ரகச்சரக்கு மிகவும் அதிகமாக வரத்தில் 70 சதம், டீலக்ஸ் ரகத்தில் 30 சதம் வரை வந்ததால் 80,000 மூட்டைகள் வரை விற்பனையாகாமல் தேங்கிவிட்டது. வியாபாரிகள் கணிப்புப்படி நடப்பு ஆண்டு ரிக்கார்டு இருப்போடு தற்போது பஞ்சாப், உத்தரப்பிரதேச நயம் சரக்கு சப்ளையாவதால் ஆந்திர வத்தலுக்கான கிராக்கி குறைந்துவிட்டது. கிடைத்த செய்திகளின்படி இருப்பு வைத்தவர்கள் வரப்போகும் நாட்களில் டீலக்ஸ் ரகத்தின் விலையில் உயர்வு ஏற்படலாம் என்பதால் விற்பனை செய்ய வில்லை.காரணம் வரப்போகும் பருவ விதைப்புக்காக வத்தல் விதை மிகவும் குறைந்த அளவில் வருகிறது. இதனால் வரப்போகும் உற்பத்தியில் குறைவு ஏற்படலாம். குண்டூர் மண்டியில் தேஜா 11,000-13,500, டீலக்ஸ் 13,600-13,800, 355 பேட்கி 10,000-12,500, சின்ஜேட்டா பேட்கி 10,000-12,000, டிடி ரகம் 10,000-13,000, 2043 பேட்கி 12,000-13,500, 341 ரகம் 11,000-13,500, டீலக்ஸ் 14,000, நெ.5 ரகம் 11,000-13,500, 273 குபேரா ரகத்தில் 10,000-12,500, ஆர்மூர் ரகம் 9500-10,700, ரோமி 11,500-12,500, க்ளாசிக் 9500-10,500, பங்காரம் 12,000-12,500, புல்லட் 10,000-13,000, தேஜா சண்டு 6500-7500, சண்டு 5000-6000 வரை வியாபாரமாகியது. சென்ற வாரம் கம்மம் மண்டிக்கு 15-16 ஆயிரம் மூட்டைகள் விவசாயிகள் சரக்கு, 30,000 மூட்டைகள் ஏசி கிட்டங்கி சரக்கு வரத்தில் தேஜா 14,125, நடுத்தரம் 13,000-13,500, சண்டு 7000-7500, நடுத்தரம் 5500, வாரங்கல் மண்டிக்கு 14-15 ஆயிரம் மூட்டைகள் வரத்தில் நயம் தேஜா 13,500, நடுத்தரம் 11,000- 13,000, நயம் 341 ரகம் 12,500, நடுத்தரம் 11,000 -12,000 ரூபாய் வரையும்,
Updated On: June 16, 2025, 6:28 am