Subscription Service

All Ads in Tamil

புதிய துவரை வரத்தில் உயர்வு

ஹைதராபாத் :- கிடைத்த செய்திகளின்படி மியான்மரில் புதிய பயிர் அறுவடை ஆரம்பமாகிவிட்டது. மேலும் 15, பிப்ரவரிக்குப்பிறகு வரத்து உயர வாய்ப்புள்ளது. நடப்பு ஆண்டு மியான்மரில் உற்பத்தி சென்றஆண்டை விட ஏறக்குறைய 20-25 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது. மேலும் தற்போது பழைய சரக்கு இருப்பு 10-15 சதம் வரை தான் கையிருப்பில் உள்ளது. இதன் சப்ளை நடை பெற்று வருகிறது. இந்தியாவில் உற்பத்தி குறைவால் விலையில் உயர்வு ஏற்பட்டு மியான்மரின் சப்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் டாலரை விட இந்திய ரூபாய் மதிப்பு குறைந்து 92 ரூபாய் வரை ஆகி நடப்பு ஆண்டு 2026 ஆகஸ்ட்- செப்டம்பர் வரை உள்ளூர் விலை உயர்ந்து 9500-10,000 வரை ஆகலாம் என்பதால் கர்நாடகத்தில் புதிய சரக்கு வரத்து ஆரம்பமாகியதும் இருப்பு வைப்பவர்களின் கொள்முதல் மற்றும் புதிய துவரம்பருப்புக்கான நுகர்வோர் தேவைக்கு ஏற்ப சப்ளையில் குறைவால் மகாராஷ்டிர மண்டியில்

Updated On: February 2, 2026, 7:00 am
ஆந்திர, கர்நாடகத்தில் புதிய புளி வரத்து உயர்வு

ஹைதராபாத் :- வியாபாரிகளின் கணிப்புப்படி சென்ற வாரம் ஆந்திர இந்துப்பூர், கர்நாடக அனைத்து உற்பத்தி பகுதியில் புதிய ரகம் வரத்து உயர்ந்து வருகிறது. மேலும் ஆந்திரத்தின் முக்கிய நுகர்வு கேந்திர நகரங்களில் விற்பனைக்காகச் செல்கிறது. மற்றும் ஏசி கிட்டங்கியில் சரக்கு குறைவால் விற்பனைக்காக வரும் சரக்குப் பூராவும் விற்பனையாகிறது. காரணம் நடப்பு ஆண்டு சரக்கின் தரம் மிகவும் அருமையாக வருகிறது. மகாராஷ்டிர லாத்தூர், சோலாப்பூர் மற்றும் எள்லையில் அமைந்துள்ள கர்நாடகத்தில் புதியது நடவு வேலை வேகமாக நடைபெற்று வருகிறது. வியாபாரிகளின் கூற்றுப் படி நடப்பு ஆண்டு சரக்கின் நிறம் சென்ற ஆண்டை விட நன்றாக இருப்பதால் உள்ளூர் மண்டியில் 7000-10,000, பார்சியில் 12,000-14,000 வரை வியாபாரமாகிறது. இந்த வட்டாரங் களில் பயிர் நிலைமை மிகவும் நன்றாக வருகிறது. ஆனால் பழைய சரக்கு இருப்பு தீர்ந்துவிட்டது.

Updated On: February 2, 2026, 6:57 am
வரலாற்றிலேயே முதல் முறையாக நிலக்கடலை விலை ஆகாயத்திற்கே சென்றுவிட்டது

ஹைதராபாத் :- வியாபாரிகளின் கணிப்புப்படி இந்திய வரலாற்றில் முதல் முறையாக விவசாயிகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட நிலக்கடலை விலை உயர்ந்து 7000-10,300 ரூபாயை எட்டியது. மேலும் கர்நாடக யாதகிரி, ராய்ச்சூர், தெலங்கானாவின் மெகபூப்நகர், நாராயண்பேட், அச்சம்பேட், ஜெட்செர்லா, நாகர் கர்நூல், கல்பர்கா வட்டார மண்டியில் சேர்ந்து தினசரி ஏறக்குறைய 1லட்சம் மூட்டைகளுக்கும் அதிகமாக சரக்கு வந்ததோடு யாதகிரி மண்டியில் 12,000 மூட்டைகள் வரத்தில் 8300-10,300, வனப்பருத்தியில் 20,000 மூட்டைகள், மெகபூப்நகரில் 15,000 மூட்டைகள் வரத்தில் 8000-13,000 வரை குவின்டலுக்கு வியாபாரமாகியது. மேலும் தெலங்கானா உற்பத்தி மண்டியிலிருந்து நிலக்கடலை பருப்பு 50-60 மற்றும் 60-65 கவுன்ட் 17,000- 18,000, 60-70 கவுன்ட் 15,500-15,700, 70-80, 80-90 கவுன்ட் 14,000-14,800 ரூபாய் வரை குவின்டலுக்கு வியாபாரமாகி ஹைதராபாத், நிஜாம்பாத், விஜயவாடா மற்றும் சென்னை வட்டாரங்களுக் காகச்செல்கிறது. கிடைத்த செய்திகளின்படி குஜராத்தில் மாநில அரசு மூலம் சென்ற ஆண்டு, நடப்பு ஆண்டு கொள் முதல் செய்யப்பட்ட சரக்கு விற்பனை செய்யப்படவில்லை. மேலும் ரபிப்பருவத்திற்கான விதைப்பில் குறைவு மற்றும் மகாராஷ்டிர பகுதியில் விவசாயிகள் நிலக்கடலைக்குப் பதிலாக எள் உற்பத்தியில் ஆர்வமாக உள்ளார்கள். மேலும் தெற்கு ஆந்திரம், கர்நாடகம் மற்றும் தமிழ் நாட்டில் கரீப்பருவ சரக்கு இருப்பு மிகவும் அடிமட்டத் திற்கே சென்று விட்டது. தற்போது விலையை பார்க்கும்போது கோடைகால பருவ விதைப்புக்கான நிலக்கடலை விதைக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. காரணம் நடப்பு ஆண்டு அதிக மழை பெய்தததால் குளம், ஏரி, கிணறு போன்ற வற்றில் தண்ணீர் நன்றாக உள்ளதாலும், நிலத்தில் அதிகப் படியான ஈரப்பதம் காரணமாக சில மாநில விவசாயிகள் விதைப்புக்காக ஆர்வமாக உள்ளார்கள்.

Updated On: February 2, 2026, 6:56 am
சீரக பயிர் அறுவடையில் தாமதம் - எதிர்காலம் ஒளிமயம்

ஹைதராபாத் :- நடப்பு ஆண்டு குஜராத்தின் சீரக விதைப்பில் குறைவு மற்றும் பருவ நிலை சாதகமாக இல்லாததால் உற்பத்தியில் ஏறக்குறைய 40 சதம் வரை குறைவு ஏற்பட்டது. ஆனால் ராஜஸ்தானில் விதைப்பு சென்ற ஆண்டுக்குச்சமானமாக ஆகியுள்ளது. தற்போது வானிலை மோசமாக இருப்பதால் பயிர் அறுவடையில் தாமதமேற் பட்டு வருகிறது.மேலும் நாட்டின் பலசரக்கு வியாபாரிகளின் தேவை யால் வரும் சரக்குப்பூராவும் உடனுக்குடன் விற்பனை யாகிறது. இதனால் பழைய சரக்கு மீதி இருப்பில் குறைவு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய சரக்கு வரத்து 15,மார்ச் வரை உயரலாம். மேலும் இதனிடையில் மந்தத்தின் போது இருப்பு வைக்கும் வியாபாரிகளின் கொள்முதல் ஆரம்பமாகிவிடும். காரணம் வியாபாரிகள் கூற்றுப்படி 2026 தீபாவளிக்கு முன்பே விலை உயர்ந்து 350 ரூபாய் வரை கிலோவை தாண்டலாம்.

Updated On: February 2, 2026, 6:54 am
இறக்குமதி பட்டாணியில் திடமாவது நின்றுவிட்டது

ஹைதராபாத் : வியாபாரிகளின் கணிப்புப்படி டாலரை விட ரூபாய் குறைந்துவிட்டதால் இறக்குமதி செலவு அதிகமாவதால் சென்ற வாரம் இறக்குமதி சரக்கு விலையில் திடமாவது நின்றுவிட்டது. ஆனால் கடலை விலையில் குறைவு காரணமாக உள்ளூர் பட்டாணி விலையில் தாக்கம் ஏற்பட்டுவருகிறது. வேளாண் மந்திராலய ரிப்போர்ட்டின்படி நடப்பு ஆண்டு ரபிப்பருவத்திற்காக 12,டிசம்பர் வரை பட்டாணி விதைப்பு சென்ற ஆண்டின் இதே சமயம் 8,27,000 ஆக இருந்தது 7,92,000 எக்டாரில் நடந்துள்ளது. சென்ற வாரம் கானடாவின் மஞ்சள் பட்டாணி டிசம்பர்-ஜனவரி மாத ஷிப்மெண்ட் கண்டிஷன் 315 டாலர் டன் வரை சி அண்டு எஃப் கூறப்பட்டது. மும்பையில் கானடாவின் இறக்குமதி ரகம் 3725, ரஷ்ய ரகம் 3625, ஹாஜிராவில் கானடா ரகம் 3700, ரஷ்ய ரகம் 3600, முந்தராவில் கானடா ரகம் 3650, ரஷ்ய ரகம் 3600,கல்கத்தாவில் கானடா ரகம் 3850-3900, ரஷ்ய பகுதியில் 3650-3700 ரூபாயாகியது.உத்தரப்பிரதேச மௌராணிப்பூர், உரைய், மஹோபா வட்டாரங்களில் வெள்ளை 3500-4000, பச்சை 3000-7000, மத்தியப் பிரதேச ஜபல்பூரில் வெள்ளை 2700-3165, பச்சை 2000-3200 வரையும் வியாபாரமாகியது.

Updated On: December 22, 2025, 6:14 am
இறக்குமதி மசூர் குறைவு

மும்பை :- வியாபாரிகளின் கணிப்புப்டி நடப்பு ரபிப்பருவத்தில் மசூர் விதைப்பு நிலையாக இருந்ததோடு சாதகமான பருவத்தால் மகசூல் அதிகமாக ஆகலாம் என்று கணித்ததோடு வெளிநாட்டு ஏற்றுமதியாளர்கள் மூலம் விலையை குறைத்து கூறப்படுவதால் சென்ற வாரம் இறக்குமதி மசூர் விலையில் குறைவு ஏற்பட்டது. மேலும் நாட்டு மசூர் விலையில் சற்று ஏற்று, இறக்கம் ஆனபிறகு விலை நிலைத்துவிட்டது .வேளாண் மந்திராலய ரிப்போர்ட்டின்படி நடப்பு ஆண்டு ரபிப் பருவத்திற்காக 12,டிசம்பர் வரை நாட்டில் மசூர் விதைப்பு சென்ற ஆண்டின் இதே சமயம் 14,57,000 ஆக இருந்தது 14,60,000 எக்டாராகியது. சென்ற வாரம் சர்வதேச மார்க்கெட்டில் கானடா மசூர் டிசம்பர்-ஜனவரி மாத ஷிப்மெண்ட் கண்டிஷனில் 545 டாலர், ஆஸ்திரேலியாவின் 540 டாலர் டன் வரை சி அண்டு எப் கறப்படுகிறது. சென்ற வாரம் மும்பையில் கானடா மசூர் கண்டெயினரில் 50 ரூபாய் குறைந்து 5800, ஹாஜிரா, முந்தரா, காண்டளாவில் 5500-5600, டில்லியில் கானடா ரகம் 5875, கல்கத்தாவில் ஆஸ்திரேலிய ரகம் 5950 -5975, டில்லியில் மத்தியப்பிரதேச வட்டார மசூர் 6625 ரூபாய் வரை வியாபாரமாகியது. உத்தரப்பிரதேச மௌராணிப்பூரில் 5600-6500, உைாயிஸ் 5400-5800, மஹோபாவில் 5400-5859, மத்தியப்பிரதேச மண்டியில் 4500-6100 ரூபாயாகியது.

Updated On: December 22, 2025, 6:13 am
புளிக்கான கிராக்கி குறைவு

ஹைதராபாத் :- வியாபாரிகள் கணிப்புப்படி கர்நாடக குண்டுலூர்பேட் பகுதியில் சென்ற வாரம் 70-80 மூட்டைகள் புதிய புளி சிறிதளவு வரத்தொடங்கி போட் ரகம் 2000-2500 ரூபாய் வரை வியாபாரமாகியது. மேலும் அடுத்த வாரத்திலிருந்து வரத்து உயர வாய்ப்புள்ளது. மேலும் பெல்காவ், மைசூர், செலிக்கேரி பகுதியில் வாரத்திற்கு ஏறக்குறைய 5-6 லாரிகள் ஏசி கிட்டங்கி சரக்கு விற்பனையானதில் பூல்ரகம் உள்ளூரில் 12,000 -13,000, அகமத்நகர் பகுதி சரக்கு 15,000-16,000 வரை வியாபாரமாகி மும்பை, ராய்ச்சூர் பகுதிக்குச்செல்கிறது. ஆந்திர இந்துப்பூர் ஏசி கிட்டங்கியிலிருந்து சென்ற வாரம் 10-12, புங்கனூரிலிருந்து 20-25, சாலூரிலிருந்து 8-9, இதர பகுதி ஏசி கிட்டங்கியிலிருந்து 5-6 லாரிகள் புளி விற்பனையாகியது. இதில் இந்துப்பூர், கரிப்பூல் 18,500-21,000, நடுத்தரம் 17,000-19,000, பி.எப் கரிப்பூல் 17,000- 17,500, நடுத்தரம் 14,000-15,000, நயம் சப்பாத்தி 12,500-13,000, மகாராஷ்டிர பூல் ரகம் 10,000-12,000, நடுத்தரம் 8000-10,200, விதை ரகம் உள்ளூரில் 5500-6000, மகாராஷ்டிர ரகம் 6400-6800 ரூபாய் வரை வியாபாரமாகியது. புங்கனூரில் கரிப்பூல் 17,000-19,000, சாலூரில் நயம் செமி ப்ளவர் 9900-10,000, நடுத்தரம் 7400-7500, ஆவரேஜ் 6000-6200, விதை ரகம் 4300-4800, ஜெகதல்பூரில் சென்ற ஒரே வாரத்தில் 70-80, ராஞ்சி, லோஹர்டாகா மற்றும் சுற்றுவட்டார ஏசி கிட்டங்கி யிலிருந்து 10-12 லாரிகள் விற்பனையானதில் நடப்பு ஆண்டு விதை ரகம் 4500-5000, நிறம் மங்கிய சரக்கு 4000-4500, நடுத்தர பூல்ரகம் 10,500-10,800 ரூபாயாகியது. ஹைதராபாத்தில் 1200 மூட்டைகள் புதியது வரத்தில் ரகவாரியாக வியாபாரமாகியது. மேலும் தின:ரி 1-2 லாரிகள் ஏசி கிட்டங்கி சரக்கு வரத்தில் மகாராஷ்டிர நயம் பூல்ரகம் 13,500-15,000, கர்நாடக பகுதி சரக்கு 12,000-13,500, இந்தூரில் ஒம் பிராண்டு 15,500, நடுத்தர பூல்ரகம் 12,000, விதை ரகம் 6500, உன்ஹேலில் 5-6 லாரிகள் வரத்தில் பூல் ரகம் 11,000, விதை ரகம் 6300 வரை வியாபாரமாகி குஜராத், தமிழ்நாடு பகுதிக்குச்செல்கிறது. மகாராஷ்டிர பார்சியில் மார்ச் மாத சரக்கு 12,000-13,000, ஏப்ரல் மாத சரக்கு 12,000- 12,500, அகமத்நகர் பகுதி ஏசி கிட்டங்கி யிலிருந்து சென்ற ஆண்டு பூல்ரகம் 13,000-13,800, தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, பாப்பாரம்பட்டி, தர்மபுரி பகுதியில் கரிப்பூல் விதை ரகம் 7000-7500, நடுத்தரம் 6000-6700, ஏசி சப்பாத்தி 6000-6700, நடுத்தரம் 5000-5700, பாப்பாரம்பட்டி உள்ளூரில் சப்பாத்தி 14,000-14,500, மகாராஷ்டிர ரகம் 15,000-15,500, விதை ரகம் உள்ளூரில் 5500-5700, மகாராஷ்டிர ரகம் 6000-6500, போட் ரகம் உள்ளூரில் 4200-5300, மகாராஷ்டிர ரகம் 5000-5200, திண்டுக்கல், தேனி, கம்பம் பகுதியில் சப்பாத்தி 12,000-13,500, நடுத்தரம் 9500-11,000, விதை நயம் ரகம் 6000-6500 ரூபாயாகியது.

Updated On: December 22, 2025, 6:11 am
இந்திய கடுகு - சோயா புண்ணாக்கு ஏற்றுமதியில் குறைவு

இந்திய கடுகு - சோயா புண்ணாக்கு ஏற்றுமதியில் குறைவு மும்பை :- வெளி நாட்டு மார்க்கெட்டில் கடுகு புண்ணாக்குக்கான தேவையில் குறைவு, உலக மார்க் கெட்டில் சோயா புண்ணாக்கு மிகவும் அதிக சப்ளையால் இந்தியாவிலிருந்து புண்ணாக்கு ஏற்றுமதி மீது தாக்கம் ஏற்பட்டது. இந்திய சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசி யேஷன் கணிப்புப்படி நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல்,2024 முதல் பிப்ரவரி,2025 வரை நாட்டில் புண்ணாக்கு ஏற்றுமதி ஓராண்டுக்கு முன்பு இதே சமயம் 44,90,000 ஆக இருந்தது 12.39 சதம் குறைந்து 39,33,000 டன்களாகியது. இதில் பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி 2024 ல் 5,15,000 ஆக இருந்ததை விட 3,30,000 டன்கள் வரை குறைந்தது. மேலும் ஏப்ரல்,2024 முதல் பிப்ரவரி,2025 வரை தேவையில் குறைவு காரணமாக இந்தியாவிலிருந்து கடுகு புண்ணாக்கு ஏற்றுமதி ஓராண்டுக்கு முன்பு இதே சமயம் 20,39,000 ஆக இருந்தது 17.53 சதம் குறைந்து 16,82,000 டன்களாகியது. மார்ச்,2024 ல் கடுகு புண்ணாக்கு ஏற்றுமதி 285 டாலர் டன்னாக இருந்தது. அது குறைந்து 270 டாலர் வரை எட்டியபிற/ 17,மார்ச்,2025 அன்று குறைந்து 190 டாலர் டன்னாகியது. ஆமணக்கு புண்ணாக்கு ஏற்றுமதி :- ஏப்ரல் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை இந்தியாவிலிருந்து ஆமணக்கு புண்ணாக்கு ஏற்றுமதி ஓராண்டுக்கு முன்பு இதே சமயம் 3,39,000 ஆக இருந்தது 21.44 சதம் குறைந்து 2,74,000 டன்களாகியது. டி-ஆயில்டு ரைஸ் ப்ரான் :- ஆகஸ்ட்,2023 முதல் ஏற்று மதிக்கு தடை காரணமாக உள்ளூர் உற்பத்தியாளர்கள் முக்கியமாக கிழக்கிந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட்டது. உள்ளூர் மார்க்கெட்டில் டி-ஆயில்டு ரைஸ் ப்ரான் விலை ஓராண்டுக்கு முன்பு 13,500 ஆக இருந்ததை விட குறைந்து 8500 ரூபாய் வரை குவின்டலுக்கு ஆகியது. சோயா புண்ணாக்கு ஏற்றுமதி :- நடப்பு நிதி ஆண்டின் முதல் 11 மாதத்தில் ஏற்றுமதி ஏறக்குறைய சென்ற ஆண்டுக்குச்சமானமாக உள்ளது.இதனிடையில் ஜெர்மனி, பிரான்சு நாட்டுக்கான தேவையால் ஏற்றுமதி சென்ற ஆண்டை விட இதே சமயம் 19,34,000 ஆக இருந்தது 19,40,000 டன்களாகியது. ஆனால் நடப்பு எண்ணெய் ஆண்டில் அக்டோபர்,2024 முதல் பிப்ரவரி,2025 வரை உலக மார்க்கெட்டில் மிகவும் அதிக சப்ளையால் இந்திய சோயா புண்ணாக்கு ஏற்றுமதி ஓராண்டுக்கு முன்பு இதே சமயம் 13,47,000 ஆக இருந்தது குறைந்து 10,31,000 டன்களாகியது. ஏற்றுமதி விலையில் குறைவு ஏற்பட்டு 380 டாலராக இருந்ததை விட குறைந்து 360 டாலராகியது. நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல்,2024 முதல் பிப்ரவரி, 2025 ல் தென் கொரியா இந்திய புண்ணாக்கு இறக்குமதி ஓராண்டுக்கு முன்பு இதே சமயம் 7,87,000 ஆக இருந்தது குறைந்து 6,14,000 டன்களாகியது. இதில் கடுகு புண்ணாக்கு 3,94,000, ஆமணக்கு புண்ணாக்கு 1,66,000,, சோயா புண்ணாக்கு 54,156 டன்கள் வரை ஆகியது. வியட்நாம் இந்திய புண்ணாக்கு இறக்குமதி ஓராண்டுக்கு முன்பு 3,94,000 ஆக இருந்தது குறைந்து 2,21,000 டன்னாகியது. இதில் கடுகு புண்ணாக்கு 1,87,000, சோயா புண்ணாக்கு 22,208, டி-ஆயில்டு ரைஸ் ப்ரான் எக்ஸ்டிராக்ஷன் 11,283 டன்கள், கடலை புண்ணாக்கு 3003 டன்களும் இறக்குமதி செய்தது. தாய்லாந்து இந்திய புண்ணாக்கு இறக்குமதி ஓராண்டுக்கு முன்பு இதே சமயம் 6,04,000 ஆக இருந்தது 4,13,000 டன்கள் வரையும் செய்தது. இதில் கடுகு புண்ணாக்கு 3,88,000, சோயா புண்ணாக்கு 15,879, கடலை புண்ணாக்கு 8655 டன்களும், சீ கணிப்புப்படி நடப்பு நிதி ஆண்டின் முதல் 11 மாதத்தில் ஐரோப்பிய நாடு இந்திய சோயா புண்ணாக்கு இறக்குமதியை ஏறக்குறைய 5,95,000 டன்கள் வரை செய்தது. பங்ளாதேஷ் இந்திய புண்ணாக்கு இறக்குமதி ஓராண்டுக்கு முன்பு 7,79,000 ஆக இருந்தது குறைந்து 6,98,000 டன்னாகியது. இதில் கடுகு புண்ணாக்கு 5,51, 000, சோயா புண்ணாக்கு 1,38,000 டன்களும், கென்யா அக்டோபர்-பிப்ரவரியில் சோயா புண்ணாக்கு இறக்குமதி 1,49,000 டன்களாகியது.

Updated On: March 25, 2025, 6:38 am